ஓடி ஒழியும் இனிய பாரதியின் சகாக்கள்!
பிள்ளையான் சகாவான இனியபாரதியின் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிலக்ஷன் என்பவர் கல்முனையில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, மற்றுமொரு நபரான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த 12 அம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் மீது முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இனியபாரதியின் சகாக்கள் அதுது தாம் கைதாகலாம் என்ற பயத்தில் ஓடி ஒளிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.