15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் ; விகாராதிபதிக்காக குவிந்த சட்டத்தரணிகள் ; நிர்கதியாய் நின்ற சிறுமி

Anuradhapura Sexual harassment Sri Lanka Police Investigation
By Vironika May 16, 2026 01:42 AM GMT
Report

சிறுமி ஒருவரை தாகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.

சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் ; விகாராதிபதிக்காக குவிந்த சட்டத்தரணிகள் ; நிர்கதியாய் நின்ற சிறுமி | Information Released Regarding Vikara Adhipathi

சாட்சியங்கள்

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் சட்டத்தரணி பிரதீப் திஸாநாயக்க முன்னிலையானார்.

மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் கைவிடப்பட்ட சிறுமி ஆனால் தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் உரிமைகளுக்காக எந்த வழக்கறிஞரும் அல்லது வேறு எந்த வெளி தரப்பினரும் முன்னிலையாகவில்லை.

15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வரும் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.

இரவு பெற்றோருடன் சென்ற 4 வயதுச் சிறுவனுக்கு நடந்தேறிய சம்பவம் ; நடுவீதியில் பிரிந்த உயிர்

இரவு பெற்றோருடன் சென்ற 4 வயதுச் சிறுவனுக்கு நடந்தேறிய சம்பவம் ; நடுவீதியில் பிரிந்த உயிர்

இந்நிலையில், குறித்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான பொலிஸார் தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ள சிறுமியின் தாயாரான பெண்ணின் வங்கிக் கணக்கு அறிக்கைகள் ஆகியவை மாத்திரமே எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளன.

இலங்கை வந்த சீன பெண் வர்த்தகரால் பரபரப்பு ; அதிகாரிகளின் அதிரடியால் அம்பலமான தகவல்

இலங்கை வந்த சீன பெண் வர்த்தகரால் பரபரப்பு ; அதிகாரிகளின் அதிரடியால் அம்பலமான தகவல்

மேலும் பிரதிவாதியான அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டிருததுடன், தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதன்போது சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தின தேரருக்காக மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், "எனது சேவைபெறுநர் சார்பில் தற்போது பிணைக்கோரிக்கை எதனையும் முன்வைக்கப் போவதில்லை என்றும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சிகிச்சைப் பெற்று வரும் எனது சேவைபெறுநருக்கு மேலும் ஒருசில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது. அத்தோடு முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வழக்கு விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கும் நோக்குடனும் தற்போது பிணைக்கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை" என ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் தெரிவித்திருந்தார்.

மஞ்சள் பூசிய மணமகளுக்கு நடந்த சம்பவம் ; துயரத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்

மஞ்சள் பூசிய மணமகளுக்கு நடந்த சம்பவம் ; துயரத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்

இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறப்படும் சிறுமியின் தாயாருக்காக, மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணைக்கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், சந்தேகநபருக்குப் பிணை வழங்க வேண்டாம் எனப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான், கோட்டை நீதிவான் பசன் அமரசேன சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பித்திருந்த உத்தரவுக்கமைய, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சந்தேகபரான தேரரை எதிர்வரும் 22 ஆம் திகதி அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும், அதுவரை சந்தேகபரான பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் இதன்போது உத்தரவிட்டிருந்தார்.

மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US