ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Harini Amarasuriya Sri Lankan Schools Education School Children
By Sahana May 21, 2025 12:45 AM GMT
Sahana

Sahana

Report

பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையானது தற்போதுள்ள முறைமைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (20) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

பதுளையில் நடுவீதியில் நடந்த கோர சம்பவம் ; தம்பியை கொடூரமாக தாக்கிய அண்ணா!

பதுளையில் நடுவீதியில் நடந்த கோர சம்பவம் ; தம்பியை கொடூரமாக தாக்கிய அண்ணா!

இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சேவையில் உள்ள ஆசிரியர்களின் ஓய்வு காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள், கஷ்டப் பகுதிகளில் உள்ள பாடங்களின் பன்முகத்தன்மை,

பாட மட்டத்தில் ஆசிரியர் வெற்றிடங்களைக் கணக்கிடுதல் மற்றும் ஆசிரியர் கல்லூரி மட்டத்தில் ஒரே நேரத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டு பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல் | Information Released Regarding Teacher Vacancies

பின்னர், அவர்கள் தேசிய கல்விக்கல்லூரி டிப்ளோமா பட்டத்தைப் பெற்ற பின்னர், கல்விக் கல்லூரி இறுதியாண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டாலும், சம்பந்தப்பட்ட பகுதியில் வெற்றிடங்கள் இல்லாவிட்டால், நியமனங்கள் வழங்கும்போது, அவர்கள் பிற மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

கல்விக் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில், ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஆசிரியர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற இணங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த மாகாணங்களில் பயிற்சி பெறுநர்களால் விண்ணப்பிக்கப்பட்ட பாடத்தில் வெற்றிடங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில், பயிற்சி பெறுநர்களின் விருப்பத்தின் அடிப்படையில், பயிற்சி பெறுநர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அந்த வெற்றிடங்கள் உள்ள பகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல் | Information Released Regarding Teacher Vacancies

இதற்குக் காரணம், நாம் தற்போதுள்ள முறைகளைப் பின்பற்றினாலும், ஆட்சேர்ப்பு மற்றும் வெற்றிடங்களைக் கண்டறியும் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது, கல்வி அமைச்சு இந்தப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான குழுக்கள் அவர்களின் இணக்கத்துடன் ஆசிரியர் நியமனங்களுக்கு இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

என்றாலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களை ஏற்றுக்கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். பின்னர் ஒரு குறிப்பிட்ட முறைமையின்படி அல்லது விருப்பத்தின் பேரில் இடமாற்றங்களை செய்துகொள்ளுங்கள்.

படைவீரர் நினைவு நிகழ்வில் மீண்டும் மஹிந்த மற்றும் கோட்டா

படைவீரர் நினைவு நிகழ்வில் மீண்டும் மஹிந்த மற்றும் கோட்டா

நாம் அதை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகள் இருவரின் கண்ணோட்டத்திலிருந்தும் பார்க்க வேண்டும். தெற்கிலிருந்து வடக்கிற்கு நியமனம் பெற்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

எட்டு ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் ஆசிரியர்களும் உள்ளனர். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குளிர்பான நிலையத்திற்கு 50, 000 தண்டம்

தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குளிர்பான நிலையத்திற்கு 50, 000 தண்டம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US