இலங்கையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவோருக்கு வெளியான முக்கிய தகவல்
பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால காலவரையறைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

ஒலிபெருக்கி பயன்பாடு
பொலிஸ் அறிவித்தலின்படி, வாரத்தின் நாட்களைப் பொறுத்து ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திங்கள் முதல் வியாழன் வரை: காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அனுமதி
வெள்ளி மற்றும் சனிக்கிழமை: நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 1:00 மணி வரை அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை : நள்ளிரவு 12:30 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை நடத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நேரக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.