சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!
தரமற்ற மருந்துகளை உரிய ஒப்பந்தங்கள் இன்றி வழங்கும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் கடந்த (14.11.2023) ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது அரச மருந்தக கூட்டுதாபனம் மற்றும் ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.
மேலும் விலை நிர்ணயக் குழு ஒன்றின் மூலம் விலையை தீர்மானிக்குமாறும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் தேவையான மருந்துகளை சரியான முறைகளில் இறக்குமதழ செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.