வாட்டி வதைத்த பெரும் அனர்த்தம் ; பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து வந்த தகவல்
தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் அண்மையில் புயல்களால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழத்தவர்களுக்கு பிரித்தானிய அரச குடும்பம் சார்பில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில், பிராந்தியம் முழுவதும் பரவலான அழிவு ஏற்பட்டதை அறிந்து நானும் ராணி கமிலாவும் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்.

மிகுந்த வேதனை
மக்களின் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை மிகுந்த வேதனை அளிக்கிறது. "அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வீடுகள் அழிக்கப்பட்ட பலருக்கும், காணாமல் போனவர்களின் செய்திக்காகக் காத்திருக்கும் அனைவருக்காகவும் பிராத்திக்கிறோம். ,
துணிச்சல் மிக்க அவசரகால பணியாளர்கள் மற்றும் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளின் போது அத்தியாவசிய உதவிகளை வழங்கும் அனைவரையும் பாராட்டுகிறோம்.
இந்தியா, மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்களை நினைவில் கொண்டு, நானும் மற்றும் ராணி கமிலாவும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் “உறுதியாக மனங்களில் வைத்திருக்கிறோம்” இந்த நாடுகளின் மக்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்க பிரார்த்தனைகள் செய்கிறோம்.
இயற்கையின் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசரத் தேவையாகும். இந்த பேரழிவுகள் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் சவால்களின் தெளிவான நினைவூட்டலாக எவ்வாறு செயல்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. என மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.