இலங்கை வைத்தியசாலை ஒன்றில் இடம்பெறும் பகீர் கிளப்பிய தகவல்!
மாத்தறை பிரதான வைத்தியசாலையில் அமைந்துள்ள பிணவறைக்குள் சில உயிரினங்கள் நுழைந்து பிணம் தின்பதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நாக பாம்புகள், சாரை பாம்புகள், எலிகள், கரப்பான்கள், உடும்புகள் மற்றும் பாறை உடும்புகள் என்பவே நுழைந்து அங்குள்ள பிணங்களை உண்பதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக பிணவறையில் பணிப்புரியும் ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக கூறப்படுகின்றது.
அத்துடன் பிணவறையின் இரும்பு கதவு உடைந்து சேதமடைந்து இருப்பதே அதற்கு காரணம் என வைத்தியசாலையின் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை அண்மைய தினங்களில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களில் காது, மூக்கு போன்ற உறுப்புகளை எலிகள் உட்பட விலங்குகள் கடித்து தின்றுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை பிணவறையின் இரும்புக் கதவு சேதமடைந்துள்ளமை இதற்கு காரணம் எனவும் இது குறித்து பல முறை வைத்தியசாலையின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.