கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷி மரணம் தொடர்பில் தாயார் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Court of Appeal of Sri Lanka
By Sahana May 23, 2025 01:25 AM GMT
Report

கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் ஆறாவது மாடியிலிருந்து கீழே குதித்து சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி அம்ஷியின் தாய் இன்று (22) கொழும்பு கூடுதல் நீதவான் மபாத் ஜெயவர்தன முன்னிலையில் ஆஜராகி மகளின் மரணம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

வைத்தியசாலையில் நேர்ந்த விபரீதம் ; நோயாளி ஒருவருக்கு நேர்ந்த கதி

வைத்தியசாலையில் நேர்ந்த விபரீதம் ; நோயாளி ஒருவருக்கு நேர்ந்த கதி

குறித்த வாக்குமூலத்தில் ,பம்பலப்பிட்டி கல்லூரியின் கணித ஆசிரியரின் துன்புறுத்தல் மற்றும் தனியார் கல்விநிறுவன உரிமையாளரின் அவமதிப்பினால் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தனது மகள் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தான் நம்புவதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஆர்.எஸ்.கே.ஏ. கெலும் பிரியந்தவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட சாட்சியப் பரிசோதனையின் போது, அதிகாரி கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் பின்வருமாறு கூறினார்.

பொலிஸ் அதிகாரி : "டியூஷன் ஆசிரியர் உங்கள் மகளைத் திட்டுவது மற்றும் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிப்பது குறித்து பொலிசில் புகார் அளித்தீர்களா?" தாய்: “நான் புகார் செய்யவில்லை." பொலிஸ் அதிகாரி : “உங்க மகள் இதற்கு முன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாளா?"

கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷி மரணம் தொடர்பில் தாயார் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் | Information Court Mother Kotanjenai Student Death

தாய்: “ஆமாம், அவள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றாள். ஒரு முறை அவள், அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டாள். மற்றொரு முறை அவள் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாள்."

பொலிஸ் அதிகாரி: “உங்கள் மகள் மனக் குழப்பத்தால் அவதிப்படுவதால், அவளைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்று மருத்துவக் குழு உங்களுக்கு அறிவுறுத்தியதா?"

தாய்: “ஆம், எனக்கும் என் கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது."

பொலிஸ் அதிகாரி: "அப்படி ஒரு அறிவிப்பு இருந்தும், ஏன் அந்த மகளை தனியாக ஒரு டியூஷன் வகுப்பிற்கு அனுப்பினீர்கள்?”

தாய்:" அவள் எப்போதும் தன்னைச் சிறைபிடித்து வைத்திருப்பதாகக் கூறுகிறாள். அவளுடைய டியூஷன் வகுப்பு வீட்டிற்கு அருகில் உள்ளது, அதனால்தான் அவள் அனுப்பப்பட்டாள்.

பொலிஸ் அதிகாரி : "உங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ள முன்னர் ஏதாவது நடந்ததா?”

தாய்: "ஆம், ஒரு சம்பவம் நடந்தது."

பொலிஸ் அதிகாரி: “என்ன ஆச்சு?”

கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷி மரணம் தொடர்பில் தாயார் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் | Information Court Mother Kotanjenai Student Death

தாய்: "ஏப்ரல் 26 ஆம் திகதி மாலை 6 மணியளவில், என் மகள் மேல் தளத்தின் ஏழாவது மாடிக்குச் சென்றாள். நானும் அந்த இடத்திற்குச் சென்றேன். நான் சென்றபோது, என் மகள் பால்கனியில் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தாள். புத்தகத்தின் உள்ளே ஒரு பூ இருந்தது. அங்கேதான் மகள் கீழே குதித்தாள்."

பொலிஸ் அதிகாரி: “மகளை அங்கே பார்த்த பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்?"

தாய்: “நான் என் மகளிடம் கவலைப்படாதே, மருந்து வாங்கப் போகலாம்னு சொல்லிட்டு அவளை எங்களோட கூட்டிட்டுப் போனேன்.”

பொலிஸ் அதிகாரி: "ஏப்ரல் 28 இரவு உங்கள் மகள் யாரிடமாவது 'என்னைக் காப்பாற்றுங்கள்' என்று சொல்வதைக் கேட்டீர்களா?"

தாய்: “ஆமாம், வீட்டை விட்டு வெளியேற அவள் பிடிவாதமாக இருந்ததால் நாங்கள் கதவை மூடிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், அவள், 'ஐயோ, செக்கியூரிட்டி அங்கிள், என்னைக் காப்பாற்று!' என்று கத்துவதைக் கேட்டேன்.”

பொலிஸ் அதிகாரி : "ஏப்ரல் 29 அன்று என்ன நடந்தது?"

தாய்: "என் மகள் ஒரு வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னாள்."

கையூட்டல் பெற முற்பட்ட காவல்நிலைய பொறுப்பதிகாரி யாழ். சிறைச்சாலையில்

கையூட்டல் பெற முற்பட்ட காவல்நிலைய பொறுப்பதிகாரி யாழ். சிறைச்சாலையில்

பொலிஸ் அதிகாரி: “நீங்கள் என்ன செய்தீர்கள்?"

தாய்: "அன்று மதியம் 3:00 மணியளவில் என் மகள் வகுப்பிற்குச் செல்வதாகக் கூறி லிஃப்டில் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் கீழே இறங்குகிறாளா என்று நான் பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் கீழே இறங்கி தெருவுக்குள் நுழைவதை நான் பார்க்கவில்லை, அதனால் என் மகள் கீழே செல்லவிருந்த லிஃப்டுக்குச் சென்றேன். அந்த நேரத்தில், வெளியே பெரிய சத்தம் கேட்டது. நான் பால்கனிக்குச் சென்று கீழே பார்த்தபோது, என் மகள் தெருவில் தரையில் கிடப்பதைக் கண்டேன். “என் மகள் ஒரு வாகனத்தில் மோதியிருக்கலாம் என்று நினைத்தேன்."

பொலிஸ் அதிகாரி: “அடுத்து என்ன நடந்தது?"

தாய்: “இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த என் மகளை என் கணவருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில், என் மகள் இறந்துவிட்டாள் என்று அறிந்தேன்." என்றார். தாயாரின் சாட்சியம் இன்று முடிவடைந்த நிலையில், சிறுமியின் தந்தையின் சாட்சியம் இந்த மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.'

தமிழர் பகுதியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்

தமிழர் பகுதியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US