காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் தெரிய வந்த தகவல்கள்
காலி - நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று (14.05.2023) அதிகாலை அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் காலி - நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேச பொலிஸ் நிலையத்தில் வினவிய போது காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் இன்று (14.05.2023) காலை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த நான்கு சிறுவர்களின் தாய்களில் ஒருவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் தமது வீட்டு சுற்றுச்சூழலிலே இருந்ததாக பொலிஸாருக்கு குறித்த தாய் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களின் பெற்றோர்களும் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக தொழில் செய்வதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கி தங்கியிருந்துள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை காலி - நெலுவ தெல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்புடைய செய்திகள்:
ஒரே வீட்டில் தங்கியிருந்த நான்கு சிறுவர்கள் மாயம்