நாட்டின் சில பகுதிகளை தனிமைப்படுத்துவது தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த் ஹேரத் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட தகவலானது தற்போது நாட்டில் குறித்த பகுதிகள் உடனடியாக முடக்கும் திட்டம் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் மக்களுக்கு அதிகபடியான விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட குறைந்தது ஐந்து மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றியுள்ளன. இந்த நிலையில் அனுமதி பெறாத நிகழ்வுகள் நடத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் மக்கள் அவதானமாக இருந்தால் நாட்டில் மீண்டும் ஒரு முடக்கத்திற்கான வாய்ப்பு ஏற்படாது என தெரிவிக்கப்ட்டுள்ளது.