இலங்கைக்குள் நுளையும் சீன கப்பலை நோட்டமிடும் இந்திய கடற்படை
இலங்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சீன கப்பலின் நடமாட்டத்தை அவதானித்துக்கொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் பிரின்டிற்கு the print தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லவுள்ள சீனாவின் ஆராய்ச்சி கப்பலின் நடமாட்டத்தை கண்காணித்துக்கொண்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் சீன கப்பலின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணிக்கின்றது சீன கப்பல் ஆகஸ்ட் நடுப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையும் என அறியமுடிகின்றது.
எனினும் கப்பலின் அம்பாந்தோட்டை விஜயத்திற்கான சரியான நோக்கம் தெரியவரவில்லை. இந்த கப்பல் எதற்காக செல்கின்றது என்பது தெரியவில்லை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான கப்பல்கள் சீனாவோ அல்லது வேறு எந்த நாடோ ஏவுகணை பரிசோதனையை மேற்கொள்ளும்வேளையே புறப்படத்தொடங்கும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் இது போர்கப்பல் இல்லை,இவ்வாறான கப்பல்கள் முன்னரும் இந்த பகுதியில் நடமாடியுள்ளன நாங்கள் கண்காணித்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
யுவான்வாங்5 என்ற சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விண்வெளி மற்றும் செய்மதி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பிட்ட கப்பல் வரவுள்ளதை முதலில் மறுத்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பின்னர் 11 முதல் 17ம் திகதிக்குள் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துநிற்க்கும் என்பதை உறுதி செய்துள்ளன.
தனது பாதுகாப்பு பொருளாதார நலன்கள் தொடர்பான விடயங்களில் தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்துவருகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் அரின்டம் பக்சி ஊடகங்களிற்கு தெரிவித்ததை தொடர்ந்தே இலங்கை இதனை தெரிவித்துள்ளது.