இலங்கையில் இருந்து புறப்பட்டது இந்திய தேசிய பேரிடர் மீட்பு குழு
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மீட்பு பணிக்கு வந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர்.
ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் , இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

NDRF உறுப்பினர்களுக்கு நன்றி
இந்திய மீட்ப்பு குழுவினர் நாட்டிலிருந்த காலத்தில் ஆழமாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளைச் சென்றடைந்தனர், அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்தனர், கடுமையாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவினர், அவசரத் தேவை ஏற்பட்டபோது முக்கியமான ஆதரவை வழங்கியதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

அவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன், கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் தளபதி எயார் கொமடோர் அமித ஜெயமஹா, விமானப்படை அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்த பேரிடர் நிவாரண முயற்சியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவிற்காக NDRF உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
