விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய பிரஜை
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
73 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
சந்தேக நபரான இந்திய பிரஜை தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 908 கிராம் குஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.