இலங்கைக்கு படையெடுக்கும் இந்திய இந்து மதத்தலைவர்கள்
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அரசியல் தலைவர்கள் படையெடுக்க மறுபுறம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்து மதத்தலைவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் நேற்றையதினம் இந்திய பிரதமர் மோடியின் நண்பரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் தலைமையிலான குழுவின் வடக்கிற்கு வருகை தந்துள்ளனர்.

விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு வருகை தந்த நிலையில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் வழிபாடுகளை முன்னெடுத்திருந்தனர். இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள 'சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்திருந்தனர்.
அதேவேளை இவர்களுக்காக மன்னார் தள்ளாடி விமான ஓடு தளம் மற்றும் பலாலி ஓடுதளம் இந்து மதத்தலைவர்களிற்காக திறந்துவிடப்பட்டிருந்தது. இந்திய இந்து மத குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்திலும் கீரிமலையிலும் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.