சுமந்திரனை சந்தித்து உரையாடிய இந்தியத் தூதுவர்
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் அவர்களின் அழைப்பின் பேரில் அவரது வீட்டில் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடியதாக எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
ஈபிடிபி கட்சியுடன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆதரவு வேண்டி பேச்சுக்களை நடத்தியுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்குமிடையில் கொள்கை ரீதியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக் கட்சியும் கூட்டில் இணைய வேண்டும் என்ற அழைப்பை மீண்டும் விடுப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியத்திற்கு விரோதமாக செயற்பட்ட தரப்புகளுடன் இணைந்து பதவிகளைப் பெறுவதே நோக்கம் எனில், எங்கள் கூட்டில் வருவதன் ஊடாக தமிழரசுக் கட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளை தருவதற்கு நாங்கள் உறுதிப்படுத்த தயாராக உள்ளோம் எனவும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கிறோம்.
மாறாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இணைந்து புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் டக்ளஸ் தேவானந்தாவை இரகசியமாக சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிவிட்டு அந்த சந்திப்பு மக்களுக்கு தெரியவந்தவுடனே கூட்டம் காலவரையின்றி பிற்போடப்பட்டது என கூறி ஒழித்து திரிவதைப்போல் நாங்கள் செயற்படவில்லை.
நாங்கள் ஒழிவு மறைவு இல்லாமல் கட்சியின் தீர்மானத்தின் படி சகல கட்சிகளுடனும் பேசியிருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் மறுதலித்துள்ளார்.