ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு இந்தியாவிலிருந்து வந்த அறிவுறுத்தல்
பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும்”என இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
நிதி முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரது கைதுக்கு, காங்கிரஸ் எம் பி சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும்
இது குறித்து காங்கிரஸ் எம் பி சசி தரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, மேலோட்டமாகப் பார்த்தால், அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்திருப்பது குறித்து கவலை கொள்கிறேன். உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவர் ஏற்கனவே சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
இது அவர்களின் உள் விவகாரம் என்பதை முழுமையாக மதிக்கும் அதே வேளையில், பழிவாங்கும் அரசியலை இலங்கை அரசு கைவிட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தசாப்தங்களாக தேசத்திற்குச் சேவை செய்துள்ளார்.
அவர் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.