புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கை தூதர் ; அகில இந்திய காங்கிரஸ் கண்டனம்
புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதித் தூதரக அதிகாரி (Ganeshanathan Ketheeswaran) கணேசநாதன் கேதீஸ்வரன், புதுச்சேரி மாநில உள் விவகாரங்களில் தலையிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா குற்றச்சாட்டை விடுத்துள்ளார்.
புதுச்சேரியின் வைத்திக்குப்பம் பகுதியில் கடற்றொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கும் நோக்கில், கேரா தெரிவிப்பின்படி, தூதர் லச்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அழைப்பின் பேரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதே நிகழ்ச்சியில் பாஜகவின் புதுச்சேரி தலைவர் மற்றும் ராஜ்பவன் தொகுதி வேட்பாளர் வி.பி. ராமலிங்கமும் கலந்துகொண்டனர்.

பவன் கேரா X (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “வெளிநாட்டுத் தூதர்கள் அந்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பது 1961 வியன்னா தூதரக உறவுகள் உடன்படிக்கையில் நிபந்திக்கப்பட்டது.
இந்தியா மற்றும் இலங்கை இருவரும் இதற்கு கையெழுத்திட்டுள்ளனர். இது அதனை மீறியதாகும்” என்று கூறினார். கேரா, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்றும், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதுகுறித்து தூதரக ரீதியான பதில் அளிப்பாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.