நத்தார் நிகழ்வு முடித்து விட்டு திரும்பிய அருட்தந்தையர்களிற்கு நேர்ந்த சம்பவம்
கிளிநொச்சி - மயில்வாகனபுரத்தில் நத்தார் நிகழ்வு முடித்து விட்டு கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவர்கையில்,
நேற்றிரவு(27) நத்தார் ஒன்று கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில் ஒருவரை தவிர ஏனையவர்கள் தங்களின் அருட்தந்தையர்களுக்குரிய ஆடைகளுடன் கார் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இதன் போது சுமார் 10 பேர் இளைஞர் குழுவொன்று மது போதையில் கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் வீதியில் மறித்து பணம் கோரியுள்ளனர். அதற்கு அருட்தந்தையர்கள் மறுப்புத் தெரிவித்த போது அவர்கள் பயணித்த வாகனம் அடித்து உடைக்கப்பட்டதோடு, அருட்தந்தையர்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அருட்தந்தையர்கள் எவ்வித அபாயமு நேற்படவில்லை என கூறப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.