மட்டக்களப்பில் ஆலயம் ஒன்றிற்கு வழிபட சென்றவரின் ஆதங்கம்! கண்டுகொள்ளுமா நிர்வாகம்?
மட்டக்களப்பில் உள்ள வரலாற்று புகழ்மிக்க ஆலயம் ஒன்றுக்கு சென்றிருந்த நபர் ஒருவர் தமது ஆதங்கத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார்.
மாபியாக்களாக மாறிவரும் மட்டக்களப்பு ஆலயங்கள்
மட்டக்களப்பில் உள்ள வரலாற்று புகழ்மிக்க ஆலயம் ஒன்றுக்கு சென்றிருந்தேன் வாகனத்தை நிறுத்துவதற்கு 150 ரூபாய் என்றார்கள் அதையும் கொடுத்தேன் 1km நடந்து ஆலயம் சென்றோம்.
பூசைகள் முடிந்த பின்பு பசி ஏற்ப்பட்டது ஏதாவது சாப்பிடனும் போல தோன்றியது கடை ஒன்றிற்கு சென்று சாப்பாடு எதாவது இருக்கின்றதா என்று கேட்டபோது கொத்துரொட்டி மட்டும் இருக்கின்றது போட்டு தரவா என கேட்க நாம் 2 கொத்து 1 கொக் சோடாவும் எடுத்தோம்.
முழுவதும் சாப்பிட முடியவில்லை மிகுதியை வைத்துவிட்டு எவ்வளவு என்று கேட்டோம் 2400.00 என்றார் சாப்பிட்ட அந்த இடத்திலேயே சாப்பிட்ட சாப்பாடு செமிபாடு அடைந்துவிட்டது.
மனம் கேட்கவில்லை நீங்கள் தந்தது வெறும் ரொட்டியும் 4, 5 கரட் லீட்ஸ் துண்டுகள் போட்ட கொத்து தானே ஏன் இவ்வளவு பணம் எடுக்கின்றீர்கள் என வினாவினேன்.
கடைக்காரர் இந்த கடை வாடகை 1 இலட்சத்தி 50 ஆயிரம் கரண்ட் பில் 2000 நாங்கள் என்ன செய்வது எங்களால் இலாபம் பார்கமுடியவில்லை நாளை நகைகளை அடகு வைத்து கடை வாடகை கொடுக்க வேண்டும் என்றார்.
உண்மையில் இன்று பொருளாதார சுமைக்கு மத்தியிலும் மக்கள் படும் துயரம் சொல்லமுடியாதவை ஆலயங்கள் என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் அல்லாமல் மக்களையும் ஒரு கனம் நினைத்து பார்க்க வேண்டும்.
சிறுபிள்ளைகளை அழைத்து வருபவர்கள் பொருட்களை பார்த்து பெருமூச்சிவிட்டு செல்லும் காட்சிகள் ஒரு கனம் மனதை உருக்கியது ஏன் ஆலய நிருவாகங்கள் இவ்வாறு செய்கின்றனர்.
எதிர்வரும் காலங்களில் ஆலய நிருவாகங்கள் சற்று மக்களையும் மனதில் நினைத்து செயற்படுவது சாலச்சிறந்தது என சுட்டிக்காட்டியுள்ள நபர், எந்த கடவுளும் இவ்வளவு பணம் யாரிடமும் அறவிடச் சொல்லவில்லை என குறிப்பிட்டுள்ள அந்நபர், இது தொடர்பில் ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பதிவிட்டுள்ளார்.