ஊக்கத்தொகை தொடர்பில் துறைமுக ஊழியர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்
இலங்கை துறைமுக ஊழியர்களுக்கான ஆண்டு ஊக்கத்தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவது உட்பட பல்வேறு சலுகைகளுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த உடன்பாடுகள் 26ஆம் திகதி நடைபெறும் இயக்குநர் குழு கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன.
ஆண்டு போனஸ் தொகை
ஆண்டு போனஸ் தொகையை ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தவும், அதில் 60 சதவீதத்தை இந்த ஆண்டிலும், 40 சதவீதத்தை 2026 ஆம் ஆண்டிலும் வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தவிர, துறைமுக ஊழியர்களின் ஊதிய உயர்வின் மதிப்பை ஆகஸ்ட் முதல் 80 சதவீதம் வரை உயர்த்துவது, ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்படும் 3,500 ரூபாய் ஊக்கத்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் தொடர்பாகவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.