கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; 10 மணிநேரம் வெட்டு!
கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளில் நாளை 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர் சுத்திகரிப்பு
கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைப் பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா, பிரதேச சபைப் பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தபடவுள்ளது.
அதேசமயம் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பில் அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.