எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று(13) காலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்தில்நடைபெற்றது.
இதன்போது ஒவ்வொரு எரிபொருள் நிலையத்துக்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR அமைப்புடன் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு பற்றிய தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
வழிகாட்டுதல்களை பின்பற்றாத எரிபொருள் நிலையங்கள் குறித்து உரிய நிர்வாக முடிவுகளை எடுக்க பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் அத்தியாவசிய சேவைகள், பொது போக்குவரத்து, மீன்பிடித் துறை, விவசாயத் தேவைகள், கைத்தொழில்கள், சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கான எரிபொருள் விநியோகம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.