யாழ். செம்மணியில் மனிதப் புதைகுழி தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுடன் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்தார்.
யாழ் - செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இன்று இரண்டாம் கட்டத்தின் நான்காம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்றது.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா அவர்களது கண்காணிப்பின் கீழ் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இடம்பெற்றது.
இதன் போது சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுடன் 18மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த மனிதப் புதைகுழி வழக்கு நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் திறந்தமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.