கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்த முக்கிய அறிவிப்பு
கொழும்பு கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புறப்பாடு முனையத்துக்குள் பார்வையாளர் நுழைவது, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு வரை மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலைய நடவடிக்கைகளை சீராக நடத்துவதற்கும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும் உச்ச நேரங்களில் பார்வையாளர் அணுகலைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசலைக் குறைக்கவும், திறமையான செயல்பாடுகளை உறுதி செய்யவும், பயணிகள் மற்றும் விமான நிலைய பார்வையாளர்களுக்கு அதிக வசதியை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த தடைசெய்யப்பட்ட நேரங்களில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.