2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சவாலானதாகும்
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடைவதில் அபாய நிலைமை காணப்படுவதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டம் குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் ஃபிட்ச் மதிப்பீடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தரவுகளுக்கு அமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 வீதமாக இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை அதனைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் ஃபிட்ச் மதிப்பீடுகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்குகளை எட்டுவது சவாலானது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருமான இலக்குகளை அடைய பெறுமதிசேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் மூலம் பொருட்களின் விலை 8.7 வீதம் அதிகரிக்கலாம் எனவும் ஃபிட்ச் மதிப்பீடுகள் நிறுவனம் கணித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செலவுகளை 14 வீதத்தால் அதிகரிக்கும் நோக்கில் சம்பளம் , கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூலதனச் செலவுகள் குறைக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் 3.3% பொருளாதார வளர்ச்சி வேகம் நிச்சயமற்றது எனவும் ஃபிட்ச் மதிப்பீடுகள் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.