இலங்கையில் மீண்டும் மோசமடைய தொடங்கும் பாதிப்பு! மக்களே அவதானம்
இலங்கையில் இன்று இதுவரையில் மேலும் 735 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavandra Silva) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் Covid-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5இலட்சத்து 65 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இன்று இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (01) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,399 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 341 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5இலட்சத்து 41 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது.