முல்லைத்தீவுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் திருட்டு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் சட்ட விரோத முறையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் டிப்பர் வாகன சாரதியை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்ததோடு, இரண்டு டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (09.02.2024) பொலிஸார் டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனையிட்டபோதே அவ்வாகனத்தில் சட்ட விரோதமாக கிரவல் மணல் ஏற்றிச் சென்றமை தெரியவந்துள்ளது.
இரண்டு டிப்பர் வாகனத்தினதும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனத்தினையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும், வாகனத்தையும் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.