அதிவேக நெடுஞ்சாலையில் போர் ஒத்திகை; மிரட்டும் இந்தியா!
உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கா அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியா – பாகிஸ்தான் போர் மூழுமா?
அந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கா அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக கங்கா அதிவேக நெடுஞ்சாலையில் ரபேல், ஜாகுவார், மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரை யிறக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டு வருகின்ந்தாக கூறப்படுகின்றது.
பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள நிலையில் இந்திய விமானப்படையின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.