அச்சம் என்பதை என் வாழ்க்கையில் முதல் தடவை உணர்ந்தேன்; மனம் திறந்த பிரபலம்
இலங்கைக்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த வீராங்கனை சுசந்திக ஜெயசிங்க. அப்போது அவருக்கு 25 வயது. அவர் உறுதியான வலுவான மனோநிலையை கொண்டிருந்தார். அது எந்த சூழ்நிலையையையும் அவர் எதிர்கொள்ளக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் கொரோனாவின் பிடியில் உலகநாடுகள் சிக்கியபோது இலங்கையும் அதன் கோரப்பிடியில் சிக்கித்தவித்தது. இந்நிலையில் தனது மொத்த குடும்பமும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தருணம் குறித்து சுசந்திகா தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் எப்படி தொற்றியது என்பது என்பது எனக்கு தெரியாது நான் கவனமாகயிருந்தேன் எனது பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொண்டேன் என்னுடன் வாழ்ந்த எனது தந்தை உட்பட அனைவரையும் கவனமாக பார்த்துக்கொண்டேன் என அவர் தெரிவித்தார். எனது மகளிற்கு அறிகுறிகள் தெனபட்டவேளை எனது மகனும் பாதிக்கப்பட்டார் அது காட்டுதீ போல வீட்டிற்குள் பரவியது என அவர் கூறினார்.
வீட்டில் அனைவரும் ஒரேமாதிரியான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியவேளை நான் என்ன செய்வது எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தெரியாமல் திணறியதாகவும், நான் வழமையாக அச்சமற்றவள் சாதிக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவள் அந்த தருணத்தில் அவை அனைத்தும் பறந்துபோய்விட்டன பதட்டமே மேலோங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் முதலில் நாடியது இலங்கை இராணுவத்தை – தனது பதின்ம வயதில் தனது விளையாட்டு வாழ்க்கையை வலுப்படுத்துவதற்காக இராணுவத்தையே அவர் நாடியிருந்தார். ஜெயசிங்க இலங்கை இராணுவத்தில் விளையாட்டிற்கு பொறுப்பாக உள்ள அதிகாரியை தொடர்புகொண்டதை அவர் இராணுவதளபதிக்கு தெரியப்படுத்தினார்.
இதனையடுத்து அடுத்த நாள் காலை சுசந்திகாவிற்கும் பிள்ளைகளிற்கும் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இராணுவம் துரிதமாக செயற்பட்டு என்னையும் எனது குழந்தைகளையும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. அந்த சோதனைகளின் முடிவுகள் நாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தன. அதன் பின்னர் எனது வீட்டிலிருந்த ஏனையவர்களை சோதனைக்கு உட்படுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர் .
அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானதும் அவர்கள் அனைவரையும் இராணுவத்தினால் நடத்தப்படும் நிலையத்திற்கு அனுப்பினார்கள் என சுசந்திகா தெரிவித்தார். எனினும் நானும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பதற்கான அனுமதியை கோரினோம் எனவும் அவர் தெரிவித்ததுடன் அச்சம் என்பது உண்மையான விடயம் என்பதை அப்போது வாழ்க்கையில் முதல் தடவை தான் உணர்ந்தேன் எனவும் சுசந்திகா தெரிவித்தார்.
