ரத்வத்தை விவகாரம்; கைகோர்த்துச் செல்லும் பெண்ணல்ல நான்; புஷ்பிகா சினம்
லொஹான் ரத்வத்தையுடன் தூக்கு மேடையைப் பார்க்க நான் செல்லவில்லை எனவும் அன்றைய தினம் மாத்தறையில் இருந்தேன் என்றும், கைகோர்த்துச் செல்லும் பெண்ணல்ல நான் எனஇலங்கையின் திருமதி அழகு ராணி புஷ்பிகா டி சில்வா, தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கு மேடையைப் பார்க்கச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
சம்பவத்தன்று தான் கொழும்பில் இல்லை என்றும், மாத்தறையில் இருந்ததாகவும், அதிவேக நெடுஞ்சாலை யில் உள்ள கமெரா காட்சிகளைச் சரி பார்த்தால் அதை உறுதிப்படுத்த முடியும் என்றும் புக்ஷ்பிகா கூறியுள்ளார்.
அத்துடன் நான் பிழை செய்தால் பிழை என்றும் சரியாகச் செய்தால் சரி என்றும் ஏற்றுக் கொள்ளும் சக்தி என்னிடம் உள்ளதாக கூறிய அவர், நான் செய்யாத தவறை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
கடந்த 12, 13 ஆகிய இரண்டு தினங்களும் என்ன செய்தேன் என எனது மனச்சாட்சிக்குத் தெரியும் என்றும், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்கு மேடையை நான் பார்க்கச் சென்றதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது எனவும் புக்ஷ்பிகா இதன்போது மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த மாதம் 12ஆம் திகதி தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைக்கு அழைத்து சென்றதாகக் கூறப்படும் புஷ்பிக்கா என்ற பெண்ணை தனக்கு யாரென்றே தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் சிறைச்சாலைக்கு செல்லும் போது பெண் ஒருவரையோ அல்லது நண்பர்களையோ அழைத்துச் செல்லவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தூக்குமேடையை பரிசோதிக்கவே தான் சென்றதாகவும், அப்போது தான் மதுபோதையில் இருக்கவில்லை என்றும் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.