கனடிய குடிவரவு அலுவலகத்திற்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய தமிழர்!
கனடிய குடிவரவு அலுவலகத்திற்கு முன்பாக நின்று தமிழர் ஒருவர் தற்கொலை செய்வதாக தெரிவித்து போராடிய நிலையில், பொலிஸாரின் அவரை அதிரடி கைதுள்ளனர்.
இந்த தகவல் கனடா ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு அலுவலகத்திற்கு முன்பாக தற்கொலை செய்வதாக கத்தி, கூச்சலிட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து கைதான நபர் தெரிவித்தது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனக்கு குடியுரிமை மறுக்கப்படுவதாகவும், அத்துடன் தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி அடைத்து வைக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதேவேளை கையில் எரிப்பொருள் நிரப்பிய ஒரு கலனை வைத்து கொண்டு கனடிய குடிவரவு அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.