நடிகை போல கட்டழகு உடல் வேண்டும்; தினமும் மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர்
நடிகை நோரா பதேகி போல உடல் கட்டுகோப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மனைவியை கணவர் சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் சிவம் உஜ்வால். அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆடம்பரமான முறையில் ஷானவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை நோரா பதேகி போல் கட்டுடலாக வேண்டும்
அவர் தனது மனைவி சினிமா நடிகை நோரா பதேகி போல் கட்டுடலாக உடலமைப்பை பெற வேண்டும் எனக்கூறி மனைவி ஷானவியை தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
கணவனின் வற்புறுத்தலால் ஷானவி தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். உடல் நல பிரச்சனையால் ஒரு நாள் உடற்பயிற்சி செய்ய தவறினாலும், அவருக்கு சாப்பாடு தராமல் பட்டினி போட்டார். கையில் கிடைத்த பொருட்களால் அவரை அடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது ஆபாச படங்கள் பார்த்து அந்த படங்களில் வருவதுபோல் நடக்கவேண்டும் என மனைவியை நிர்பந்தித்துள்ளார்.
தன் கணவன் செய்யும் இந்த கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவரை மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்து போன ஷானவி அந்த வீட்டிலிருந்து வெளியேறி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லி அழுதார். அதோடு தாய், தந்தை வீட்டிலேயே இருந்து விட முடிவு செய்தார்.
மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை
மகளை சமாதானப்படுத்திய பெற்றோர் மீண்டும் அவளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த ஷானவியை ஏற்க மறுத்த கணவன் வீட்டார், வரதட்சணை கொண்டு வரச்சொல்லி விரட்டி விட்டனர்.
கணவன் தனக்கு விருப்பமில்லாத பல விஷயங்களை செய்ய சொல்கிறார். நடிகை போல் உடலமைப்பு பெற தினமும் 3 நேரம் உடற்பயிற்சி செய்ய சொல்கிறார். நிறைய ஆபாச படங்கள் பார்க்கிறார்.
நான் அதைப் பற்றி கேட்டால் உன்னை திருமணம் செய்து கொண்டதால் என் வாழ்க்கையே வீணானது என்று அடித்தும் தன்னை தினமும் பட்டினி போட்டும் கொடுமைப்படுத்துகிறார்.
இதனால் தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வீட்டில் வரதட்சணையாக அவர்கள் கேட்டபடி ரூ.24 லட்சத்தில் கார் வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல், ரூ. 10 லட்சம் ரொக்கமாகவும் கொடுத்தார்கள்.
ஆனாலும் மாமியார் தினமும் நகை , பணம் கொண்டு வா என தன்னை கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.