வரதட்சணை தரவில்லை; மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர் குடும்பம்
இந்தியாவின் அரியானா பகுதியில் வரதட்சணை கேட்டு மனைவியை கொலை செய்து கழிவுநீர் வடிகாலில் குழி தோண்டி புதைத்த நபர் மற்றும் அவரது தாய், தந்தை உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டு அருண் என்பவர் தனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் திருமணம் நிறைவடைந்து சிறிது காலத்தில் அருண் குடும்பத்தார் தனுவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அருண் வீட்டில் கொடுமை
இதனையடுத்து பெண் தனது தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் தனது கணவருடன் சேர்ந்து வாழ சில மாதங்களுக்கு முன் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அருண் வீட்டில் கொடுமைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி குறித்த பெண் வீட்டிலிருந்து ஓடி விட்டதாக அவருடைய மாமியார் அவரது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து தனுவின் குடும்பத்தினரால் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போது 24 வயதான குறித்த பெண்ணை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொலை செய்து வீட்டின் அருகே பொதுப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் குழியில் புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர்,மாமா, மாமி, மற்றும் அவர்களது உறவினர் ஒருவர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , பெண்ணின் சடலத்தைதோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.