பணத்திற்காக குடிபோதையில் இருந்த தந்தை 6 வயது மகளுக்கு அரங்கேறிய கொடூரம்!
வெளிநாட்டில் உள்ள மனைவி பணம் அனுப்பாததால் அத்திரமடைந்த கணவன், தனது 6 வயது மகளுக்கு கழிவறையை துப்புரவு செய்யும் திரவத்தை (Toilet cleaner) வாயில் பலவந்தமாக ஊற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஹம்பாந்தோட்டை ஹுங்கம, படாட பகுதியில் வசிக்கும் நபரொருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அவ்வேளையில் அதிக குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளார் என ஹங்கம பொலிஸார் தெரிவித்தார்.
கழிவறையை துப்புரவு செய்யும் திரவம் பருகப்பட்டதா? என்பதை பரிசோதிப்பதற்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் ஆறு வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.