மனிதர்களில் மறைந்துபோன மனித நேயம்! துடிதுடித்து இறந்த சின்னம் சிறு உயிர்கள்(Video)
இந்தியாவின் கேரள மாநிலம், மலப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக புல்டோசர் கொண்டு சாலையோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டி சாய்த்தபோது, அந்த மரம் வேரோடு சாலையில் விழுந்தது.
மரம் விழுந்தபோது, மரத்தில் இருந்த பறவை கூடுகள் பல சாலையில் விழுந்து சிதறியதில் கூட்டில் இருந்த பறவை குஞ்சுகள் கீழே விழுந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலபறவைகள் குறுயிராக துடித்துகொண்டிருந்தன.
வைரலாகும் காணொளி
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் காணொளி எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Everybody need a house. How cruel we can become. Unknown location. pic.twitter.com/vV1dpM1xij
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 2, 2022
அதேவேளை எவ்வித அனுமதியும் பெறாது குறித்த மரம் வெட்டி சாய்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் , வாகனத்தின் சாரதியை கைது செய்த அதிகாரிகள் , கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.