மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன?

Gotabaya Rajapaksa Sri Lankan protests Sri Lanka Economic Crisis Gota Go Home 2022 Maldives
By Shankar Jul 13, 2022 11:07 PM GMT
Report

மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத்தின் துணையுடன் மாலத்தீவுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ நுழைந்திருக்கிறார். மேலும் அங்கிருந்து அடுத்து சிங்கப்பூருக்கு பறக்கவிருக்கிறாரா? தற்போது கேள்வியாக இருக்கிறது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருவதால், அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி மக்கள் போராடிவருகின்றனர்.

மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன? | How Did Gotabaya With His Wife Escape Flight

மக்கள் போராட்டங்களை சற்றும் கண்டு கொள்ளாத அதிபர் கோட்டாபய, தனது பதவியைக் காப்பாற்றும் வேலைகளில் தீவிரமாக இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், கடந்த ஜூன் 9 அன்று அதிபர் மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

காவல்துறை, ராணுவத் தடுப்புகளை மீறி மக்கள் உள்ளே நுழைந்த செய்தி அறிந்த கோட்டாபய ராஜபக்ஷ, வேறு வழியாகத் தப்பிச் சென்றார்.

மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன? | How Did Gotabaya With His Wife Escape Flight

முதலில் ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பியவர், தற்போது நாட்டிலிருந்தே தப்பிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்துவிட்டார். மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்லவும் திட்டமிட்டுவருகிறார்.

கோட்டாபய, இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு எப்படித் தப்பிச் சென்றார்... அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை இங்கே பார்ப்போம்!  

ஜூலை 9 அன்று, கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிவந்த மக்களில் ஆயிரக்கணக்கானோர், ஆக்ரோஷத்துடன் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்.

மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன? | How Did Gotabaya With His Wife Escape Flight

மக்கள் அங்கு வருவதற்கு முன்பாகவே மாளிகையிலிருந்து தப்பிச் சென்றிருந்தார் கோட்டாபய. மாளிகைக்குள் நுழைந்த மக்கள், ஜனாதிபதி மாளிகையின் ஒவ்வொரு பகுதியாக ஆராயத் தொடங்கினர்.

அப்போது அங்கு ஒரு பகுதியில் சுரங்க வழி இருப்பதை அவர்கள் கண்டனர். அந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் கோட்டாபய ராஜபக்ஷ தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று மக்களில் சிலர் தெரிவித்தனர்.  

ஜானதிபதி மாளிகையிலிருந்து தப்பிய கோத்தபய எங்கு பதுங்கியிருக்கிறார் என்ற தகவல்கள் எதுவும், முதலில் வெளியாகாமலேயே இருந்தன.

மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன? | How Did Gotabaya With His Wife Escape Flight

பின்னர் அவர், இலங்கையிலுள்ள ஏதாவது ஒரு ராணுவ முகாமில்தான் இருக்க வேண்டும் என்ற யூகங்கள் கிளம்பின.

இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை (ஜூன் 11) மாலை வேளையில் கோத்தபய, இலங்கை விமான நிலையத்துக்கு வந்ததாகவும், துபாய் செல்ல முயன்றதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், விமான நிலைய அதிகாரிகள் அவர் துபாய் செல்ல ஒப்புதல் வழங்கவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  

மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன? | How Did Gotabaya With His Wife Escape Flight

ஜூன் 11-ம் திகதி மாலை முதல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து புறப்படவிருந்த நான்கு விமானங்களில் துபாய் செல்ல கோட்டாபயவும், அவரின் மனைவியும் முயன்றதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், நான்கு முறையும் அவர்கள் பயணிக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில்தான், ஜூன் 13 அன்று அதிகாலை 3 மணி அளவில், மாலத்தீவின் தலைநகர் மாலேவுக்குச் சென்று இறங்கியிருக்கிறார் கோட்டாபய.  

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளில், `ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிய பிறகு விமான நிலையம் அருகிலிருக்கும் ராணுவ முகாமில்தான் இருந்திருக்கிறார் கோட்டாபய. அங்கிருந்து நான்கு முறை துபாய் தப்ப முயன்றிருக்கிறார்.

மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன? | How Did Gotabaya With His Wife Escape Flight

அதன் பிறகுதான், மாலத்தீவுக்குத் தப்பிச் செல்லும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். முதலில், `இன்னும் கோட்டாபய இலங்கை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவில்லை. எனவே, அவரை நமது நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது' என்று மறுத்திருக்கிறது மாலத்தீவு அரசு.

பின்னர், மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத் (Mohamed Nasheed) நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக கோட்டாபய மாலத்தீவுக்குள் வர அனுமதி கிடைத்திருக்கிறது.  

மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன? | How Did Gotabaya With His Wife Escape Flight

இதையடுத்து, இலங்கையிலுள்ள விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கை விமானப்படையின் AN32 ரக விமானத்தில் கோட்டாபய மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்.

அந்த விமானத்தில் கோட்டாபய, அவரின் மனைவி, பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் மாலத்தீவுக்குச் சென்றிருக்கின்றனர்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.’

தப்பியோடியது குறித்துப் பேசும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், ``ஜூன் 13-ம் திகதி பதவியை கோட்டாபய ராஜினாமா செய்வதாக இருந்தார். எனவே அதற்குள்ளாக நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட வேண்டும் என்பது அவரது திட்டமாக இருந்தது.

மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன? | How Did Gotabaya With His Wife Escape Flight

ஜனாதிபதி பதவியிலிருக்கும்போது அவரைக் கைதுசெய்ய முடியாது என்பதால்தான், பதவி விலகும் முன் தப்பியோட நினைத்தார். அதைப்போலவே, பதவி விலகும் முன்னரே மாலத்தீவுக்கு ஓடிவிட்டார்'' என்கின்றனர்.

மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US