அதிகாலையில் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்ட வீடு ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய உதவியாளர் ஒருவர், சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இன்று பலப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹுங்கல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சந்தேகநபரின் இல்லம் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டது.

சந்தைப் பெறுமதி
இதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 261 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் ரூபா ரொக்கப் பணமும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை ஈரானை தாக்குவோம் ; ட்ரம்பால் உலகிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் நபர் ஒருவரின் பிரதான உதவியாளர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.