வீடு உடைக்கப்பட்டு தொலைக்காட்சி பெட்டி திருட்டு
மஸ்கெலியாவில் வீடு உடைக்கப்பட்டு 32 அங்குல எல்,ஈ, டி தொலைக்காட்சி பெட்டி திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்ட ஸ்ஹாபுரோ பிரிவிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் நேற்று மாலை தனது இல்லத்தை பூட்டி விட்டு திருமண வைபவம் ஒன்றுக்கு சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மஸ்கெலியா பொலிஸார் பார்வை இட்ட பின்னர் விசாரணை மேற்கொண்ட போது அதே தோட்டத்தை சேர்ந்த 42வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது தொலைக்காட்சி பெட்டியும் மீட்கப்பட்டு சந்தேக நபரை ஹட்டன் பதில் நீதவான் தமயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.