சுகாதார பரிசோதகர்களை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்
பொதுச் சுகாதார பரிசோதகரையும் சுகாதார பணி உதவியாளரையும் தாக்கியதாகக் கூறப்படும் கண்டி, தலதா வீதியிலுள்ள இரவு உணவகம் ஒன்றின் உரிமையாளர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்த தாக்குதல் சம்பவம் இன்று புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த அதிகாரிகள்
கண்டி நகரில் ஜோர்ஜ் ஈ. டி சில்வா பூங்காவிற்கு அருகாமையில் உள்ள இரவு உணவகமொன்றிலிருந்து அகற்றப்பட்ட கழிவுகள் முறையாகப் பிரிக்கப்படாததால் அதனை அப்புறப்படுத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளர் சுகாதார பரிசோதகரை தாக்கிய நிலையில் தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் இது தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த அதிகாரிகள் இருவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.