இலங்கையில் வெப்ப வானிலை தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
நாட்டில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உட்பட பல மாவட்டங்களில், தற்போது நிலவும் கடும் வெப்பம், மார்ச் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பம் காரணமாக, இலங்கையில் சில பகுதிகளில், நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாளைய தினம் (28-02-2024) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரியில் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை நாளை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் அவை உணரக்கூடிய இடங்கள் பற்றிய படமும் வளிமண்டவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.