பிரித்தானிய நபர் ஒருவரை பீதியடைய வைத்த திகில் சம்பவம்
பிரித்தானியாவில் நபர் ஒருவர் உங்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் தன் கல்லூரி நாட்களில் தான் சந்தித்த பயங்கர அனுபவத்தைக் குறித்து விவரித்துள்ளார்.
பிரித்தானியாவின் வட அயர்லாந்தின் தலைநகரமான பெல்ஃபாஸ்டில் அமைந்துள்ள Queen's பல்கலைக்கழகத்தில் பயின்ற ken என்பவர், ஆவிகள் மீது நம்பிக்கை இல்லாதவர்.
ken தங்கியிருந்த அறையில் அவர் சந்தித்த அனுபவங்கள், இப்போது நினைத்தாலும் தன்னை பீதியடைய வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் ken உறங்கிகொண்டிருந்தபோது திடீரென கண்ணைத் திறந்து பார்த்தபோது ஐன்னலருகே ஒரு உருவத்தைப் கண்டுள்ளார். அப்படி இரு கருப்பை இதுவரையில் பார்த்ததில்லை என ken கூறியுள்ளார்.
மேலும் ஒரு பயங்கரமான ஒலி ஒன்று கேட்க, உடல் குப்பென வியர்க்க, ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை எதிர்நோக்கி வருவதை உணர்ந்துள்ளார். அதிலும் ஆச்சரியமான விடயம், அந்த சக்தி தன்னை மேற்கொள்ளும்போது, அவருடைய போர்வையின் மடிப்பும் அவரை நோக்கி அழுத்தியபடி மேல் நோக்கி நகர்ந்துள்ளதாக ken தெரிவித்தார்.
குறித்த கருப்பு உருவம் தோள் வரை வர, பயத்தில் நம்பிக்கை இழந்து போன, தன்னை அது ஏதோ செய்யப்போகிறது என்பதை உணர்ந்த Ken, பலமாக அதை உதைத்துத் தள்ள, சட்டென எல்லாமே விலக, அந்த உருவமும் மறைந்துபோயிருக்கிறது. அவருடைய அறையில் தங்கியிருந்த மற்றொரு நபரும் ஏதோ ஒரு பயங்கர உணர்வுக்குள்ளானதாக கூறியுள்ளார்.
இதேவேளை அடுத்த நாள் ken இருந்த ஹாஸ்டலில் லிப்டில் யாரோ வருவதும் லிப்ட் திறப்பதும் தெரிய, யாரோ முரட்டுத்தனமாக Ken தங்கியிருந்த அறைக்கதவைத் தட்டியிருக்கிறார்கள், காலால் உதைத்திருக்கிறார்கள். அசட்டு தைரியத்தில் கதவைத் திறந்து பார்த்தால், யாரும் அங்கில்லை, ஆனால், லிப்ட் மட்டும் அவர் இருந்த தளத்தில் வந்து நின்றிருக்கிறது.
இது குறித்து விசாரித்த போது, ken தங்கியிருந்த அறையில் இதற்கு முன் தங்கியிருந்த மூவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அதிலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் ஜன்னலிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் பின்பு Ken அறிந்துகொண்டார்.
இதுபோல பல பயங்கரமான அனுபவத்தை சந்தித்த Ken, Queen's பல்கலைக்கழக படிப்பை முடித்துச் சென்ற பிறகு, அவருக்குப் பின்னால் அந்த அறையில் தங்கியவர்களும், பாத்திரங்கள், கத்திகள், முள் கரண்டிகள் முதலானவை பறப்பது போன்ற விடயங்களை அனுபவித்திருக்கிறார்கள். இப்போது நினைத்தாலும், அந்த விடயங்கள் தன்னை திகிலடைய வைப்பதாகத் Ken தெரிவிக்கிறார்.