யாழில் இடம்பெற்ற கோரவிபத்து; பெண்களே அவதானம்!
சேலை மோட்டார் சைக்கிளில் சிக்கியதால் யாழில் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மகள் படுகாயங்களுக்கு உள்ளான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது. கடந்த ஞாயிறன்று நத்தார் வழிபாட்டுக்காக தேவாலயத்திற்கு சென்று திரும்பியவேளையில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தாய் உயிரிழப்பு- மகள் படுகாயம்
சம்பவத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த சோதிலிங்கம் நாகேஸ்வரி என்ற 60 வயதுடைய உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நத்தார் வழிபாட்டிற்காக இருபாலை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்று, மகளுடன் மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் அமர்ந்து வீடு நோக்கி சென்றனர்.
இதன்போது , தாயின் சேலை மோட்டார் சைக்கிள் பின் சில்லுக்குள் அகப்பட்டுக்கொண்டதால், தூக்கி வீசப்பட்டார். அதேவேளை, மகளும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தமையால் விழுந்து காயங்களுக்குள்ளானார்.
விபத்துக்குள்ளானதில், தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேசமயம் பெண்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கையில் தங்கள்து புடவை சைக்கிளில் சிக்கிவிடாது கவனம் எடுத்தால் இவ்வாறான விபத்துக்களை தவிர்க்க முடியும்.