காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்: இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
ஹொரணை - தல்கஹவில பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (07-04-2024) இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டாவது இணைப்பு
ஹொரணை, மொரகஹஹேன, மாலோஸ் எல சந்தியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 52 வயதுடைய பிலியந்தலை மற்றும் பன்னிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் மொரகஹஹேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.