இலங்கையில் அதிகமாக கொரோனாவால் உயிரிழந்தவர்கள் இவர்களே!
இலங்கையில் எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே அதிகளவில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்கள் என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அதன் பதில் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் அடிப்படையில் 91 சதவீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்றவர்களில் 8 சதவீதமானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற நிலையில் ஒரு சதவீதமானவர்கள் மட்டுமே உயிரிழந்ததாகவும் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.