உலகையே வசீகரித்த ஒரு மூலிகை; இவ்வளவு அற்புதம் ஒளிந்துள்ளதா!
உலகையே வசீகரித்த ஒரு மூலிகை, ஜாதிக்காய் (Nutmeg). இது அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. அதுமட்டுமல்லாது எண்ணற்ற மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமானது ஜாதிக்காய் (Nutmeg). இது தரும் பலன்களும் எண்ணற்றவை.
உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் ஜாதிக்காய் (Nutmeg) குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம்.
இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தார்களாம்.
எண்ணற்ற மருத்துவக் குணங்கள்
ஜாதிக்காய் கொட்டை, ஜாதிக்காயின் (Nutmeg) விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ ஜாதிப்பத்திரி, அதன் மேல் ஓடு என அனைத்தும் உணவிலும், மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
தூக்கமின்மை
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் (Nutmeg)பொடி அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.
ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு சரியாகும்.
விந்து கெட்டிப்படும், உடல் குளிர்ச்சியடையும், இரைப்பை, ஈரல் பலப்படும். செரிமானத்திறன் மிகுந்து உடல் மிகுந்த சுறுசுறுப்படையும்.
முகப்பரு, கரும் புள்ளி
ஜாதிக்காயை (Nutmeg) சந்தனத்துடன் அரைத்து முகத்தில் போட முகப்பரு, கரும் புள்ளிகளால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கும்.
அஜீரணம்
ஜாதிக்காய் (Nutmeg) தூளை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பிரச்சனை தீரும்.
ஜாதிக்காயை (Nutmeg) பாதி உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் வீதம் தண்ணீர் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி, பேதி போன்றவை தீரும்.