ரெட் ஒயின் அருந்துபவரா நீங்கள்? உங்களுக்கான ஒர் நற்செய்தி!
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்காக மக்கள் உணவில் இருந்து வாழ்க்கை முறை போன்றவற்றில் கவனமாக உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயங்களை பற்றி அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக உள்ளனர்.
இதேவேளை, கொரோனா பரவல் காலத்தில் மதுபானம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் ரெட் ஒயின் (Red Wine) குடிப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
ரெட் ஒயின் கொரோனா நோய்த்தொற்றின் அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 அல்லது அதற்கு மேற்பட்ட க்ளாஸ் ரெட் ஒயின் குடிப்பதால், கொரோனா தொற்றை தவிர்க்கும் அபாயம் 17 சதவீதம் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய மக்களின் குடிப்பழக்கம் மற்றும் அவர்களில் உள்ள கொரோனா வரலாறு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததாக பிரித்தானிய இணையதளம் தெரிவித்துள்ளது. இதில் ரெட் ஒயினில் உள்ள பாலிஃபீனால் என்ற பொருள் காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமும் குறைகிறது.
ஒயிட் ஒயின் (White Wine) மற்றும் ஷாம்பெயின் ஆகியவையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும் என ஆய்வு கூறுகிறது. இந்நிலையில் வாரத்திற்கு 1 முதல் 4 கிளாஸ் ஒயிட் ஒயின் அல்லது ஷாம்பெயின் அருந்துபவர்கள், கொரோனா நோய்த்தொற்றின் அபாயத்தை 8 சதவீதம் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், பீர் மற்றும் ஒயின் குடிப்பவர்களுக்கு கொரோனா வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. பீர் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வது Covid19 தொற்று அபாயத்தை 28 சதவீதம் அதிகரிக்கிறது என ஆய்வு கூறுகிறது. வைத்தியர்கள் கூட மது போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.