கஞ்சியை பரிசோதிக்க ஓடி வரும் சுகாதார அதிகாரிகள் தன்சல்களில் காணவில்லை
கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை என டாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைத்தத்டதில் பதிவிட்டுள்ள அவர், தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஐஸ்கிறீம் கொடுக்கலாம்.
சிங்களவர்கள் வசிக்காத வடக்கு கிழக்கில் வெசாக்
கஞ்சி வழங்கினால் இனநல்லிணக்கம் குழம்புமென தடைகொடுக்கும் மன்றங்கள், சிங்களவர்கள் வசிக்காத வடக்கு கிழக்கில் வெசாக் கொண்டாடினால் இனநல்லிணக்கம் பாதிக்கப்படுமென தடை வழங்கவில்லை .
கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளைஇ வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை. வீதியோரமாக அனுமதியின்றி ஒரு சிறு வியாபாரியால் கடை போட முடியாது.
ஆனால் இராணுவத்தினரால் அனுமதியின்றி ஆரிய குளத்தினுள் வெசாக் கூடுகளை கட்டமுடியும்.
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம். சிங்களவர்களுக்கு இன்னொரு நியாயம்.
நம்புங்கள் இலங்கை ஜனநாயக நாடு இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் பதிவிட்டுள்ளார்.