வீதியில் சென்றவர்களை வாளால் தாக்கியவரால் பரபரப்பு!
தலங்கம பிரதேசத்தில் வாள் ஒன்றுடன் வீதிக்கு வந்த நபர் ஒருவர் வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு தலங்கம பிரதேசத்தின் டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரது தாக்குதல்களால் 4 வாகனங்களும் மாகாண சபை கட்டிடமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.