இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்த மர்ம பொதி: அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 6 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் என்ற போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து உணவு பொருட்கள் என்ற போர்வையில் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியில் போதைப்பொருள் இருந்ததை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த பொதியில் 61 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 4 கிலோ 91 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சுங்கத்தில் இருந்து பொதியை அகற்ற முற்பட்ட முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.