ஹர்த்தால் அரசியல் நாடகமே ; இவ்வளவு காலமும் ஏன் இராணுவத்தை விட்டு வைத்தீர்கள்?
வடக்கு, கிழக்கில் முல்லைத்தீவு முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி கதவடைப்பு போராட்டமொன்றை நடத்துவதாக அறிவித்து தற்போது திகதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 15 ஆம் திகதி நடைபெறவிருந்த கதவடைப்பு போராட்டமானது, அடுத்த திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு -கிழக்கை பொறுத்தவரை இராணுவமுகாம்கள் பல காலமாக உள்ளன. இவ்வளவு காலத்திற்கு இவர்கள் கதவடைப்பினை நடத்தினார்களா? தற்போது இவ்வாறான கதவடைப்பு போராட்டங்களை மேற்கொள்வதில் உள்நோக்க காரணங்கள் இருக்கலாம் என்று பொது மகனொருவர் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் மக்கள் கருத்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விடயங்களை இந்த காணொளியில் மூலம் காணலாம்....